மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் மின்வாரியத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் மின்வாரியத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார்.
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், இணை செயலாளர்கள் தங்கமுடி, தாமஸ் உள்ளிட்ட ஏராளமான மின் வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் ராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com