பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி, சிவகாசியில் பட்டாசு விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில், சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து பட்டாசுத் தொழிலை பாதுகாத்திடவும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவில் முடித்திடக் கோரியும், சிவகாசி
காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அச்சங்கத் தலைவர் டி. ஆனந்தகண்ணன் தலைமை வகித்தார். செயலர்
கே. ராஜா, பொருளாளர் சி. செல்வம், தென்காசி தொகுதி முன்னாள் எம்.பி. லிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.