விருதுநகரில் இலவச வேஷ்டி, சேலை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

விருதுநகரில் இலவச வேஷ்டி, சேலை வழங்காததால், பொதுமக்கள் அல்லம்பட்டி சந்திப்பு சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் இலவச வேஷ்டி, சேலை வழங்காததால், பொதுமக்கள் அல்லம்பட்டி சந்திப்பு சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர், மாத்தநாயக்கன்பட்டி சாலையில் நியாய விலைக் கடை உள்ளது. இக்கடையில், 1030 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு குறைந்தளவே இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டன. இதனால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, விரைவில் அனைவருக்கும் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என அப்போது வருவாய் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை கடந்தாண்டு வழங்கப்பட வேண்டிய வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட வில்லை.
இந்நிலையில், நிகழாண்டிலும் 44 பேருக்கு மட்டுமே இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த குடும்ப அட்டைதாரர்கள், கடந்தாண்டு போல் அல்லாமல் நிகழாண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, அல்லம்பட்டி சந்திப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜனவரி 18 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேஷ்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com