நிறுத்தப்பட்ட விதவை உதவித் தொகையை மீண்டும் வழங்க மூதாட்டி கோரிக்கை

நிறுத்தப்பட்ட விதவை உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, சிவகாசியைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் இ.ஆனந்தகுமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.

நிறுத்தப்பட்ட விதவை உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, சிவகாசியைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் இ.ஆனந்தகுமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
     அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியை சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மனைவி புஷ்பம்மாள். வெற்றிவேல் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாராம். எனவே, தனக்கு விதவை உதவித் தொகை வழங்கக் கோரி, தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்துள்ளார்.
     இந்நிலையில், கடந்த 2010 இல் விதவை உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவித முன்னறிவிப்புமின்றி 7 மாதங்களுக்கு முன் உதவித் தொகை திடீரென நிறுத்தப்பட்டு விட்டதாம். இதனால், தற்போது தான் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தனக்கு மீண்டும் விதவை உதவித் தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com