"திமுக, காங்கிரஸ் உறவு நிலையானது'

திமுக, காங்கிரஸ் உறவு நிலையானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார்.  

திமுக, காங்கிரஸ் உறவு நிலையானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார்.  
 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்தகுமார் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  
காங்கிரஸ் கட்சியில் இதுவரை புதியதாக யாரும் நியமனம் செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வரும். எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஜூலை 22ஆம் தேதி ராகுல் காந்தியை சந்திக்க உள்ளோம்.   நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, மோடியை கட்டி தழுவியது அன்பின் வெளிப்பாடு. மோடியை எதிர்க்க வேண்டும், நாட்டு மக்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க உள்ளோம். திமுக, காங்கிரஸ் உறவு நிலையானது. தூத்துக்குடி விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருந்தால் 13 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com