ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸார் திங்கள்கிழமை அப்புறப்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும், பேருந்துகள் வரும் முக்கிய வீதிகளிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்தன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார் செய்து வந்தனர்.இந்நிலையில் நகர் காவல் துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர். காவல் துறையினர் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.