ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
   ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக விருதுநகர் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சார்பு- ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவிட்டார். தனிப்படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ராக்காச்சியம்மன் கோயில் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
  அப்போது, ராஜபாளையம், கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த நல்லுராஜ் (43) வன விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தும் 7  நாட்டு வெடிகுண்டுகளை தனது மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் நல்லுராஜை தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மம்சாபுரம் காவல் நிலையத்தில் நல்லுராஜூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com