சாத்தூர் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பண்டிதம்பட்டியைச் சேர்ந்த மாணவி (19), சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பயின்று வருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே இம்மாணவிக்கு, சாத்தூரைச் சேர்ந்த கல்லூரித் தாளாளர் செய்யது இப்ராஹிம் (53), வண்ணிமடையைச் சேர்ந்த மாரிமுத்து (26), சாத்தூரைச் சேர்ந்த பாண்டி(33) ஆகிய மூவரும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில், போலீஸார் செய்யது இப்ராஹிம், பாண்டி, மாரிமுத்துஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.