திருத்தங்கல் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள வாய்க்கால் சுத்தப்படுத்தப்படாமல் தேங்கி இருப்பதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு பரவி வருகிறது.
திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்குச் செல்ல புதிதாக சாலை அமைக்கப்பட்டு, இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டது. ஆனால், வாய்க்காலை சுத்தப்படுத்தாததால், கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியாவதுடன், துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த கழிவுநீர் வாய்க்காலை தினசரி சுத்தம் செய்யவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.