சாத்தூர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகாசி தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமை சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் சாந்தி தொடக்கி வைத்தார்.
சாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து கண்ணில் குறை உள்ளவர்களுக்கு கண்ணாடி அணிவது குறித்தும், கண்களை பாதுகாத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். முகாமில் துணை வட்டாட்சியர் சுந்தரபாரதி மற்றும் மண்டல துணை வட்டாசியர் ராஜாமணி உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.