நன்னிலம் பகுதியில் தொடர் பனிப்பொழிவால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நடா புயல் காரணமாக அதிகளவு மழைப்பொழிவு இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக கடும் பனிப்பொழிவு காரணமாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் மஞ்சள்நோய், குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்படும் நிலை உள்ளது. நடா புயலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றம் நடப்பு சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உகந்ததாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.