முழு அடைப்பு போராட்டம் குறித்து தெருமுனை பிரசாரக் கூட்டம் ஆசாத்நகர் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கே.முருகையன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் வரவேற்றார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கு பெறுவது குறித்து பேசினர். இதேபோல் பழைய பேருந்து நிலையம், குமரன் பஜார், பெரியக்கடைதெரு மற்றும் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மேலும் முத்துப்பேட்டை முழுவதும் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.