ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக  வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்  புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக  வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்  புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 9.8.2017 அன்று அத்துமீறி நுழைந்து, பொதுச்சொத்துகளையும் அரசு ஆவணங்களையும் சேதப்படுத்தியவரை கைதுசெய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது போடப்பட்ட பொய்வழக்கை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க வட்டாரத் தலைவர் கீர்த்திவாசன்  தலைமையில் அரசு ஊழியர் சங்க வட்டச்செயலாளர் மணிவண்ணன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் அசோக்  கண்டன உரை நிகழ்த்தினார்.  இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சாந்தி,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com