திருவாரூர் புகையிலைத் தோட்டம் பகுதியில் குடியிருப்போருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புகையிலைத் தோட்டம் குடியிருப்போர் தெரு நலச் சங்கத்தின் தலைவர் எம். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மாற்றத்துக்கான மக்கள் களத்தின் தலைவர் ஜி. வரதராஜன், மக்கள் அதிகாரத்தின் தலைவர் ஆசாத், பாரதி மக்கள் மன்றத்தின் தலைவர் சுபாஷ்காந்தி, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
பொது சாலை, குறுக்குச் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதை சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தெருக்களை துப்புரவு செய்து குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.