நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ரயில் நிலைய அலுவலகப் பணிகள் குறித்து நிலைய அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர், ரயில் போக்குவரத்து மற்றும் தண்டவாளம் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்தார். வரும் 18 -ஆம் தேதி தென்னக ரயில்வே பொது மேலாளர் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வதையொட்டி, இந்த முன்னோட்ட ஆய்வு பணிகள் நடந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வின்போது, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடனிருந்தனர்.