திருத்துறைப்பூண்டிஅண்ணாசிலை அருகில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரத்தலைவர் கே.சிவாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முரளிகணேசன் கண்டன உரையாற்றினார். இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.விவேகானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். தமிழக திருக்கோவில்களில் நடைமுறையிலுள்ள தரிசனக் கட்டணத்தை ரத்துசெய்யக்கோரியும், கோவில் இடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தமிழக அரசு உடனடியாக கட்டண வசூலை ரத்துசெய்ய வேண்டும் எனவும், கட்சிக்காரர்கள் இன்றி சமுதாயப்பெரியோர்களை கொண்ட அறங்காவலர் குழு அமைக்கவேண்டும், , ஆலய நிர்வாகத்தின் வரவு செலவுகள் அனைத்தும் ஆண்டிற்கு ஒருமுறை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர துணைத்தலைவர் துரை.அரசு நன்றி கூறினார்.