நீடாமங்கலம் ஒன்றியம், காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருவாரூர் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
அதற்கான கேடயத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மு,ராமன் பள்ளியின் தலைமையாசிரியை வை.திலகத்திடம் அண்மையில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ந.சம்பத், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சோ.செல்வம், கண்காணிப்பாளர் ஆவணிராஜா, பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் தி.ஆனந்த், இடைநிலை ஆசிரியை க.மகேஸ்வரி, கணினி ஆசிரியர் கோ.விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.