திருவாரூரில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எரிவாயு இணைப்புகள் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை சரிசெய்வது, நுகர்வோருக்கு சேவை ஆற்றுவதற்கான ஆலோசனைகள் பற்றி விவாதிப்பது, நுகர்வோர்களின் புகார்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்துவது போன்றவை குறித்து விவாதித்து தீர்வுகாண செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். எனவே, எரிவாயு வாடிக்கையாளர்கள், நுகர்வோர் அமைப்பினர் கூட்டத்தில் பங்கேற்று எரிவாயு விநியோகம் குறித்த குறைகளை தெரிவிக்கலாம். மேலும், எரிவாயு விநியோகம் சீராக நடைபெற தேவையான ஆலோசனைகள் வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com