பள்ளி மாணவிகளுக்கு யோகா பயிற்சி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருள்மிகு பெரியநாயகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருள்மிகு பெரியநாயகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்ரா, ஆர்.டி, பவுண்டேசன் சமூக சேவை சங்கம் சார்பில், மாணவிகளுக்கு யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவி. ரெங்கசாமி தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட பொறுப்பு அலுவலர் மயில்சாமி, தலைமையாசிரியை தாமரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் யோகா பயிற்றுநர் சசிகலா, யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பத்மாசனம், தனுராசனம், உட்கட்டாசனம், சர்வாங்காசனம் மூச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் பங்கேற்றுப் பேசினார். ஆர்.டி. பவுண்டேசன் தலைவர் விஜயகுமார் வரவேற்றார். ஆசிரியை விஜயகுமாரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com