கல்லூரி மாணவர் காணவில்லை

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மீனாட்சி வாய்க்கால் புதுத்தெருவைச் சேர்ந்தவர் அறிவானந்தம் மகன் பிரவீன் (20). இவர், நாகை மாவட்டம், ஈசனூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூன் 21) கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அறிவானந்தம் அளித்த புகாரின் பேரில், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com