மன்னார்குடியை அடுத்த அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் தி. கனகசபை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ப.அறிவழகன் பங்கேற்றார். பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் இரா.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுற்றி வந்தது. இதில் பொதுமக்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு, சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் அ.முரளி, த.கவிதா, தெ.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.