மே 26-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் நுகர்வோருக்கு உள்ள சிக்கல்களை களைவது, எரிவாயு உருளைகள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அதைக்களைவது, நுகர்வோர்களின் புகார் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்து, எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து மே 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், காஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். எனவே வாடிக்கையாளர்கள், நுகர்வோர் அமைப்பினர் கூட்டத்தில் பங்கேற்று எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com