ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை கேட்டு அதிக விண்ணப்பம்

குடவசல் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்று வரும் ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை கோரி அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

குடவசல் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்று வரும் ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை கோரி அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
குடவாசல் வட்டாட்சியர் அவலகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. தினமும் 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த மனுக்களை திருவாரூர் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி நேரிடையாக பெற்று அதன்மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், 7-ஆவது நாளான வெள்ளிக்கிழமை செல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  ஜமாபந்தி தொடங்கிய நாளிலிருந்து இதுவரை சுமார் 400-க்கும் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் முதியோர் உதவித் தொகை கேட்டு அளிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com