குடவசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை கோரி அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
குடவாசல் வட்டாட்சியர் அவலகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. தினமும் 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த மனுக்களை திருவாரூர் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி நேரிடையாக பெற்று அதன்மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், 7-ஆவது நாளான வெள்ளிக்கிழமை செல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஜமாபந்தி தொடங்கிய நாளிலிருந்து இதுவரை சுமார் 400-க்கும் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் முதியோர் உதவித் தொகை கேட்டு அளிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.