மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாள், மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சந்தைப்பேட்டை இந்திராகாந்தி சிலையருகே நடைபெற்ற நிகழச்சிக்கு, கட்சியின் நகர கமிட்டி தலைவர் ஆர். கனகவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் குணசேகரன், டி. பாலசுப்பிரமணியன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வடுகநாதன், நகர நிர்வாகிகள் சங்குகோபால், பஞ்சன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.