அஜபா நடனத்துடன் ஆழித்தேருக்கு வந்தார் தியாகராஜசுவாமி

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தையொட்டி தேவாசிரியரின் மண்டபத்திலிருந்து

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தையொட்டி தேவாசிரியரின் மண்டபத்திலிருந்து ஆழித்தேருக்கு தியாகராஜசுவாமி அஜபா நடனத்துடன் திங்கள்கிழமை இரவு எழுந்தருளினார்.
உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் மே 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக மே 28-ஆம் தேதி விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் தியாகராஜ சுவாமி, விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் சண்டிகேசுவரர் சுவாமிகள் திங்கள்கிழமை இரவு தேருக்கு எழுந்தருளினர்.
கடந்த ஏப்.5-ஆம் தேதியிலிருந்து தேவாசிரியன் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிக் கொடுத்த தியாகராஜ சுவாமி திங்கள்கிழமை இரவு 10.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, ஆயிரங்கால் மண்டபம், ஈசானிய மூலையிலுள்ள விட்டவாசல் கோபுரம் மற்றும் பிரதான கோயில் முன்வாசல் சன்னிதி தெரு வழியாக அஜபா நடனத்துடன் வந்து, ஆழித்தேரில் எழுந்தருளினார்.
முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். அம்மன் சண்டிகேசுவரர் சுவாமிகள் தியாகராஜசுவாமியை பின்தொடர் ந்து தேரில் எழுந்தருளினர்.
இதில் பங்கேற்ற பக்தர்கள் இசை வாத்திம் இசைத்துக் கொண்டு ஆடிப்பாடிவந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com