ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலர் லலிதா தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலர் லலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அடையாள அட்டையில் இடம்பெற வேண்டிய விபரங்கள் குறித்த படிவம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அதற்கான படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து நேர்க்காணலுக்கு கருவூலத்துக்கு வரும்போது அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஏற்கெனவே, நேர்க்காணல் முடித்த ஓய்வூதியதாரர்கள் அதற்கான படிவத்தை தொடர்புடைய கருவூலத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமோ அல்லது தனிநபர் மூலமாக அளிக்கவும். இதற்கான படிவத்தை தமிழ்நாடு அரசு இணையதளத்தில் அரசாணையுடன் பதவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது திருவாரூர் மாவட்ட அனைத்து சார் கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com