திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூருக்கு நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டல பொது மேலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:
நாகப்பட்டினம், தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், வேதாரண்யம், மயிலாடுதுறை, கொரடாச்சேரி, நாகூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருவாரூருக்கு தேவையான எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.