அடையாளம் தெரியாத ஆண் சடலம்

குடவாசல் அருகேயுள்ள கொத்தங்குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குடவாசல் அருகேயுள்ள கொத்தங்குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொத்தங்குடி வெட்டாற்றங்கரை அருகே வினோத் என்பவரது நிலத்தில் உள்ள இரண்டு கருவேல மரங்களுக்கிடையே அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்ட நிலையில் இருந்ததாக குடவாசல் தாலுகா  போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார், அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com