திருவாரூர் கமலாலயம் குளத்தில் முகம் கழுவச் சென்ற ஆசிரியர் ஒருவர், படியிலிருந்து வழுக்கி குளத்தில் விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் செல்வகுமார்(53). இவர், செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது, கலாலயம் குளத்தில் முகம் கழுவச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி, குளத்தில் விழுந்தாராம்.
இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள், அவரை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். சுமார் 20 நிமிட தேடுதல் பணிக்குப் பின்னர் செல்வகுமாரின் சடலம் மீட்கப்பட்டது.