வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கு இரண்டாம் பருவகால புத்தகம், நோட்புக், சீருடைகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மகாகவி பராதியார் நூற்றாண்டு விழா நினைவு வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழி பயிலும் மாணவியர் 503 பேர், ஆங்கில வழியில் பயிலும் மாணவியர் 134 பேர் என மொத்தம் 637 பேருக்கு இரண்டாம் பருவகாலத்துக்கு அரசு வழங்கும் புத்தகம், நோட்புக், சீருடைகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சா. குணசேகரன் வழங்கினார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியை தவமணி, பட்டதாரி ஆசிரியர்கள் கணேசன், வெற்றிவேலன், மற்றும் வள்ளிமணவாளன், கமலா, ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியர் கலந்துகொண்டனர்.