செவிலியர் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2017-2018 -ஆம் கல்வியாண்டுக்கு டிப்ளமோ இன் நர்சிங்  படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2017-2018 -ஆம் கல்வியாண்டுக்கு டிப்ளமோ இன் நர்சிங்  படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
விண்ணப்பங்களை மருத்துவக் கல்லூரி முதல்வர்  அழ. மீனாட்சிசுந்தரம் வழங்கி கூறியது:
நர்சிங் பட்டய படிப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் வியாழக்கிழமை முதல் அக். 21 -ஆம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை பெற விரும்புவோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செயலர் தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற பெயரில் ரூ. 300 -க்கான டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக். 23-ஆம் தேதிக்குள் தேர்வுக்குழு செயலருக்கு அனுப்ப வேண்டும். மேல்நிலைத் தேர்வில் கூட்டு மதிப்பெண் 40 சதவீதத்துக்கு குறையாமல் பெற்றவர்களும், மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியரும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
 நவம்பர் 2-ஆவது வாரத்துக்குள் தகுதி அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படும் என்றார் மீனாட்சிசுந்தரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com