பயிர்க் காப்பீடுத் தொகை கோரி ஆர்ப்பாட்டம்

விடுபட்ட விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுபட்ட விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுபட்ட விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், சம்பா சாகுபடிக்கு நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும்,  நிலுவையில் உள்ள பயிர்க் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், மேட்டூர் அணையிலிருந்து நாள்தோறும் 25,000 கன அடி தண்ணீரை திறந்து, 20 நாள்களுக்கு முறைவைக்காமல் விட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்  வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வை. செல்வராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com