திருவாரூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி திருவாரூரில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் நகர செயலர் பிரகாஷ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர். ரஜினிசின்னா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், தொழிற்சங்கத் தலைவர் தமிழரசன் மற்றும் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட துணைத் தலைவர் அருண் காந்தி, மகளிர் பாசறை மாநில செயலர் செந்தமிழ்ச்செல்வி, விவசாய அணி மாநில செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலம் ஒன்றிய நகர அதிமுக (அம்மா, புரட்சித் தலைவி அம்மா) கட்சியினர் நீடாமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கோ. அரிகிருஷ்ணன் தலைமையிலும், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆதி. ஜனகர், நகரச் செயலாளர் இ. ஷாஜஹான் உள்ளிட்டோர் முன்னிலையிலும் நகரின் முக்கிய வீதிகளின் வழியே பேரணியாகச் சென்று, தஞ்சை சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், திமுகவினர் கட்சியின் திருவாரூர் மாவட்ட அவைத் தலைவரான முன்னாள் எம்எல்ஏ சித்தமல்லி ந. சோமசுந்தரம் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ பி. ராசமாணிக்கம், ஒன்றியச் செயலாளர்கள் விசு. அண்ணாதுரை, மாயவநாதன் உள்ளிட்டோர் முன்னிலையிலும் பேரணியாகச் சென்று தஞ்சை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
மன்னார்குடியில்...
அதிமுக சார்பில் மன்னார்குடி மேலராஜவீதி, தந்தை பெரியார் சிலையிலிருந்து கட்சியின் நகரச் செயலர் ஏ.டி. மாதவன் தலைமையில் ஊர்வலமாக ருக்மணிபாளையத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றியச் செயலர்கள்(மேற்கு) கா. தமிழச்செல்வம், தங்க. தமிழ்கண்ணன்(கிழக்கு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், திமுக சார்பில், தந்தை பெரியார் சிலையிலிருந்து கட்சியின் நகரச் செயலர் வீரா. கணேசன் தலைமையில், பேரணியாக வந்து, ருக்மணிபாளையம் அறிஞர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்ட திரளான கட்சினர் கலந்துகொண்டனர்.
மதிமுக சார்பில் மாவட்டச் செயலர் ப. பாலச்சந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com