உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
அனைத்து உயிரினங்களையும் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து காப்போம் என்ற முழக்கத்துடன், இப்பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கட்டிமேடு கிளை மேலாளர் டி. நாகேந்திரன் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாணவ, மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தியும், விழிப்புணர்வு முழக்கமிட்டபடியும் வந்தனர். ஆசிரியர்கள் நேதாஜி, ராஜேஷ்குட்டி, ஐயப்பன் உள்ளிட்டோர் பேரணியை வழிநடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com