ஜாக்டோ-ஜியோ போராட்டம்: காத்திருப்போர் பட்டியலில் 5 வட்டாட்சியர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5 வட்டாட்சியர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5 வட்டாட்சியர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 - ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நீதிமன்ற உத்தரவையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் போராட்டத்தை தாற்காலிகமாக விலக்கிக்கொண்டனர். இதற்கிடையில், போராட்டத்தை தவிர்த்து பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பின்னரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற வட்டாட்சியர்கள் அம்பிகாபதி (திருவாரூர்), உதயகுமார் (திருத்துறைப்பூண்டி), பிரித்விராஜன் (நன்னிலம்), இஞ்ஞாசிராஜூ (வலங்கைமான்), மலர்கொடி (மன்னார்குடி) ஆகிய 5 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 5 பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com