ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு அட்டவணையை வெளியிடக் கோரிக்கை

கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால், ஆசிரியர்  பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என, தமிழக ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.

கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால், ஆசிரியர்  பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என, தமிழக ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.
மன்னார்குடியில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் வட்டாரத் தலைவர் கு. அருண் நிக்கோலஸ் தலைமை வகித்தார். 
தீர்மானங்கள்: கோடை விடுமுறை தொடங்க  இருப்பதால், ஆசிரியர் கலந்தாய்வு பொது மாறுதல் நெறிமுறைகள் மற்றும் அட்டவணையை வெளியிட்டு, ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், ஏப். 24-ஆம் தேதி முதல் நடைபெறும் வினாத் தாள் மதிப்பீட்டுப் பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 இதில், சிறப்பு அழைப்பாளராக  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் அ. முரளியும், வட்டாரச் செயலர் பா. நேருதாசன், பொருளாளர் ரா. முருகையன், மாவட்ட துணைச் செயலர் கு. சுப்பிரமணியன், வட்டார துணைச் செயலர் வ. ஜெயராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com