கூத்தாநல்லூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகக் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியர் செல்வி தலைமை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். கூத்தாநல்லூர் வருவாய் ஆய்வாளர் ரா ஜேஸ்வரி வரவேற்றார். வருவாய் ஆய்வாளர்கள் சத்யா (கமலாபுரம்), அசோகன் (வடபாதிமங்கலம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வட்டாட்சியர் செல்வி பேசியது:
கூத்தாநல்லூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் பிறப்பு, இறப்புப் பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அனைத்துப் பதிவேடுகளையும் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். கிராம சுயாட்சி இயக்கம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.