திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 136 பேர் மனு அளித்தனர். பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து குறித்த காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ஏ. மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.