மாணவர்களுக்கு மேடைப் பேச்சு பயிற்சி

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் மன்னை ஜேசிஐ அமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, மேடைப் பேச்சு குறித்து ஞாயிற்றுக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் மன்னை ஜேசிஐ அமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, மேடைப் பேச்சு குறித்து ஞாயிற்றுக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
 நியூட்டன் கிட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஜேசிஐ அமைப்பின் தலைவர் வி. அஞ்சறைபெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, ஜேசிஐ தேசியப் பயிற்சியாளர் வி.எஸ். கோவிந்தராஜன், மண்டலப் பயிற்சியாளர்கள் ராஜன், அன்பரசு, ராஜமோகன், மாமலைவாசன், எம்.சி.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று, சிறந்த மேடைப் பேச்சாளராக ஆவது எப்படி என்பது குறித்து பயிற்சியளித்தனர்.
 பள்ளித் தாளாளர் க. சுகாஷினி, மண்டல இயக்குநர் டி. செல்வகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.
 நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஜி. செல்வகுமார், எஸ். ராஜகோபாலன், செயலர் எம்.வி. முத்தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com