திருவாரூர்
ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் தீமிதி பிரமோத்ஸவ கொடியேற்றம்
நீடாமங்கலம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் தீமிதி பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நீடாமங்கலம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் தீமிதி பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தீமிதி பிரமோத்ஸவ விழாவைத் தொடர்ந்து, 40-ஆம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, திரௌபதியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு, சீர்காழி பம்பை தங்க மாரிமுத்து குழுவினரின் பாரதக் கதை நடைபெற்றது. ஏப்.26-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு நடைபெறும் இவ்விழா நிறைவு நாள் வரை பாரதக் கதை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஏப்.23-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது.