கோரையாற்று கரையில் மணல் மூட்டை அடுக்கி வைப்பு

கூத்தாநல்லூர் அருகேயுள்ள கோரையாற்று கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.  

கூத்தாநல்லூர் அருகேயுள்ள கோரையாற்று கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.  
கூத்தாநல்லூர் அருகே அதங்குடி கோரையாறு மணல் கொண்டான் என்ற இடத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட  நிஷா  புயலின்போது கரை உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது கோரையாற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 மணல் மூட்டைகள் தயார் செய்து அடுக்கி வைக்கும் பணி கூத்தாநல்லூர் வட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com