நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் சுவாமி கோயிலில் ஆன்மிக நகைச்சுவை பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பக்தியிலும் தொண்டிலும் சிறந்தவர் சிறுத்தொண்டர் நாயனாரா அல்லது கண்ணப்ப நாயனாரா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டி மன்றத்துக்கு சென்னை கம்பன் கழகப் பொதுச் செயலர் அரு. நாகப்பன் நடுவராக இருந்தார். சிறுத்தொண்ட நாயனார் என்ற தலைப்பில் மன்னார்குடி காந்திலெனின், பட்டுக்கோட்டை பேராசிரியர் ஜெயசித்ரா ஆகியோரும், கண்ணப்ப நாயனார் என்ற தலைப்பில் சரஸ்வதி நாகப்பன், பேராசிரியர் வள்ளியப்பன் ஆகியோரும் வாதிட்டனர். கோயில் பசுமடம் நந்தவனம் அர்த்தசாம கட்டளை நிறுவனர் மெய்யப்பன், பாரத ஆன்மிகக் கல்வி பயிலக நிர்வாகி எஸ்.எஸ். குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.