இளைஞரை காணவில்லை எனப் புகார்

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல்போனதாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல்போனதாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  
கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேலக்கொண்டாழியைச் சேர்ந்தவர் காத்தம்மாள் ( 52 ). இவரது மகன் மகாதேவன் (24). பத்தாம்  வகுப்பு வரை படித்த இவர்,  2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவைக்கு கட்டுமானப் பணிக்கு தொழிலாளியாக செல்வதாகக் கூறிச் சென்றாராம். 3 மாதத்துக்கு மேலாகியும் மகாதேவனிடமிருந்து, எந்தத் தகவலும் வராததால் கவலையடைந்த காத்தம்மாள்   பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடிக்க முடியாதததால் மகனை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com