பிப். 26 -இல் திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 26 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 26 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பான ஆயத்தக் கூட்டம் திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். முத்துமீனாட்சி தலைமை வகித்தார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வ. செல்லதுரை, துணைக் கண்காணிப்பாளர் வி. சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து கூட்டத்தில் தெரிவித்ததாவது: திருவாரூரில் உள்ள நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிப். 26 -ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 20 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதால், 8 -ஆம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை இதில் பங்கேற்கலாம். தனியார் நிறுவனங்கள் சார்பில் 2,120 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு பெறப்பட்டுள்ளன.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேர்று பணி வாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படாது. பதிவு தொடர்ந்து உயிர் பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு வரும். அரசால் அறிவிக்கப்படும் காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும்.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சுயகுறிப்பு, புகைப்படம் போன்ற ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு j‌o​b‌m‌e‌l​a‌t‌i‌r‌u‌v​a‌r‌u‌r.‌w‌e​b‌s.​c‌o‌m என்ற இணையதள முகவரியை அணுகலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com