திருவாரூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை (ஜன. 15) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்திலுள்ள உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், அரசு சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்துள்ள தின்பண்ட விற்பனை நிலையங்கள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.