திருவள்ளுவர் தினம்: மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருவள்ளுவர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி, திருவாரூரில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பனகல் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சிறுவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பேரவையின் அமைப்பாளர் கருணாநிதி தலைமை வகித்தார். இதில்  நகரச் செயலாளர் பிரகாஷ்,  ஒன்றியச் செயலர் சேகர்,  நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் செந்தில், மாநில விவசாய அணி துணைச் செயலர் சங்கர்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா,  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதா சந்திரசேகரன்,  மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு அமைப்பாளர் தாஜூதின்,  மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com