மன்னார்குடி நகர திமுக சார்பில், பொங்கல் விழா பொதுக் கூட்டம் கீழராஜவீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தம்பிதுரை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு, தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலர் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் ஜி. பாலு, மாநில மாணவரணி துணைச் செயலர் த.சோழராஜன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நகரச் செயலர் வீரா. கணேசன், தலைமைக் கழக பேச்சாளர் மு. மணிமாறன், நகர துணைச் செயலர் ஆர்.வெங்கடேஸ்வரன், முன்னாள் நகரச் செயலர் அ.சுப்பையன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் இரா.தென்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.