கூட்டுறவு சங்கங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கூட்டுறவு கடன் சங்கங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி, அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தேர்தல் நடவடிக்கைகளால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிர்வாகம் முடங்கி உள்ளதால், சங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து தொழிற்சங்கப் பதிவாளருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் தடையின்றி நடைபெற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த பிரச்னையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் மே 21 -ஆம் தேதி சங்க பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com