முன்விரோத தகராறு: ஒருவர் கைது

நீடாமங்கலம் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

நீடாமங்கலம் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன், அய்யப்பன், வினோத்(30), வினோத் மனைவி நிரஞ்ஜனா. தமிழ்ச்செல்வன் மற்றும் தங்கையன் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நவ.10-ஆம் தேதி தமிழ்ச்செல்வனை தங்கையன் உள்ளிட்டோர் தகாதவார்த்தையில் பேசி தாக்கினார்களாம். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த நீடாமங்கலம் போலீஸார் வினோத்தை கைது செய்து மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com