வாய்க்காலில் ஆண் சடலம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சாலையோர வாய்க்காலில் கிடந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சாலையோர வாய்க்காலில் கிடந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
வலங்கைமான் வட்டம், ஆலங்குடியிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில், 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை கிடந்தது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் அளித்த தகவலின்பேரில், வலங்கைமான் போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த நபர் நார்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேப்பான் (65) என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com